முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Tuesday, May 12, 2009

ஜோகூர் மாநில தேசிய இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர் சங்கம் உதயம்


ஜோகூர் மாநிலத்தில் இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்களின் நலன் காக்க உதயமாகியுள்ளது ஜோகூர் மாநிலத்தில் இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் மன்றம். கடந்த ஜூலை 2008 அன்று பதிவு இலாகாவின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட இயக்கமாக உருப்பெற்றது இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்களிடையே ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இம்மண்ணில் தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும் வாழ வேண்டும்; வளம் பெற வேண்ணும் என்று முழங்கும் தமிழாசிரியர்களுக்கு இச்சங்கத்தின் உதயம் அவர்களின் அறப்பணிக்கு மேலும் வலுவூட்டுவதாக அமையும்.

இச்சங்கம் உருப்பெறுவதற்கு வித்திட்டவர் ஜோகூர் மாநில கல்வித்துறை தமிழ்பிரிவின் உதவி இயக்குநர், இரா.விஜயன் அவர்கள். அவர்களுக்கு ஜோகூர் மாநிலத்தில் இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment