நமது மன்றத்தின் வெளியீடான ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி அவர்கள் எழுதிய 'SPM தமிழ் இலக்கிய வழிகாட்டி நூல்' அண்மையில் மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் நடந்த SPM தமிழ் இலக்கிய கருத்தரங்கில் மிகச் சிறப்பாக வெளியீடு கண்டது. ஜோகூர் மாநிலக் கல்வித்துறை அதிகாரி , தமிழ் மொழித்துணை இயக்குநர் திரு. இரா. விஜயன் அவர்கள் முன்னிலை வகிக்க, கொடை நெஞ்சர், நாடறிந்த தன்முனைப்புப் பேச்சாளர் முனைவர் திரு. ஆதிசேஷன் அவர்கள் இந்நூலை வெளியீடு செய்தார்கள். இந்நூலை அச்சிட்டு வெளியிடுவதற்கான முழுச்செலவையும் ஏற்றுக்கொண்ட அன்னார் அவர்களின் அறப்பணிக்கும் நல்லெண்ணத்திற்கும் மன்றம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. மேலும் இந்நூல் சிறப்பான முறையில் வெளியீடு காண அரும்பாடு பட்ட ஜோகூர் மாநிலக் கல்வித்துறை அதிகாரி , தமிழ் மொழித்துணை இயக்குநர் திரு. இரா. விஜயன், தாமான் யூனிவர்சிட்டி இடைநிலைப்பள்ளி ஆசிரியர் திரு. சு. ரவிச்சந்திரன், ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் திரு. கு. பூபதி குப்புசாமி, கூலாய் சுல்தான் அப்துல் ஜாலில் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் தமிழ்மணி திரு. மு.மதியழகன், ஜோகூர் மாநில மாவட்டப் பாடக்குழுத் தலைவர்கள், ஜோகூர் மாநில இலக்கியப்பாட ஆசிரியர்கள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மன்றம் தனது நன்றி மலர்களைச் சமர்ப்பணம் செய்கின்றது.

